செம்பருத்தி பார்வதியின் அடுத்த சீரியல் இதுவா? எதிர்பார்ப்பை எகிற வைத்த புகைப்படம்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதை கருத்தில் கொண்டு சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். மேலும் பழைய சீரியல்களையும் சுவாரஸ்யத்துடன் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜீ தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒளிபரப்பானது. விஜே அக்னி, ஷபானா, பிரியா ராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான இந்த சீரியல் சமீபத்தில நிறைவடைந்தது செம்பருத்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்திருந்த நடிகை ஷபானாவுக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது. இதனால் இவர் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே கலர்ஸ் தமிழ் சேனலில், தற்போது புதிதாக ஜமீலா என்ற சீரியல் தொடங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த சீரியல் தொடர்பான ப்ரமோவில் சீரியலில் லீடு ரோலில் நடிக்கும் நாயகி ஹிஜாப் அணிந்திருப்பது போன்று இருந்தது. இதனால் இந்த சீரியலின் நாயகி யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக ஜமீலா கேரக்டர் ஹிஜாப் அணிந்திருக்கும் படத்தை வெளியிட்டு இந்த படத்தில் இருப்பது யார் என்று கெஸ் பண்ணுங்க என இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ஷபானாதான் என்று கூறி வருகின்றனர்.

செம்பருத்தி சீரியலுக்கு பின் தனது அடுத்த சீரியல் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத ஷபானா அடுத்து ஜமீலா சீரியலில் தான் நடிக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.