புதுடெல்லி: நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள், இன்று மதியம் 2.30க்கு வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் எம்ரால்ட் கோர்ட் என்ற வளாகத்துக்குள் கட்டப்பட்டுள்ள 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இவற்றை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ‘எடிபைஸ்’ என்ற நிறுவனம், 3,700 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி இன்று மதியம் 2.30க்கு கட்டிடத்தை தகர்க்கிறது.
* கட்டிடத்தை இடிக்கும் இடத்துக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதையும் போலீஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
* கட்டிடத்தின் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.