ஜேடியு(JDU) எம்எல்ஏக்களை கூண்டோடு தூக்கிய பாஜக; நிதிஷ்குமார் அதிர்ச்சி!

பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஜேடியு ஒரு கூட்டணியிலும், பிரதான எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி தலைமையில் ஒரு கூட்டணியுமாக தேர்தலை சந்தித்தனர்.தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 43 இடங்களில் வென்ற ஜேடியு மற்றும் 74 இடங்களில் வென்ற பாஜக இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.

ஆரம்பம் முதலே முட்டலும் மோதலுமாக இருந்த கூட்டணி ஆட்சியில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வந்தன. அப்படி இருக்கையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளார். நிதிஷ்குமாரின் இந்த செயல் பாஜகவும் பெரும் நெருக்கடியை கொடுத்ததோடு தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிதிஷ்குமாரின் (JD(U)) கட்சியில் இருந்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சியில் உள்ள பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 37 -ஆக அதிகரித்துள்ளது.ஜேடியுவில் இருந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவியுள்ளது நிதிஷ்குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் நடிகை சமந்தா?; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

ஜேடியு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஐக்கிய ஜனதா தளத்தின் எல்.எம்.கட்டே, தன்ஜம் அருண்குமார், அஜ்ஜப் உதின், நுக்ருசுன்கர், ஜாய்கிஷான் சிங் ஆகிய ஐந்து பேர் பாஜகவில் இணைந்துள்ளதாகவும், அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.