63 துப்பாக்கிகள் பறிமுதல் ம.பி.,யில் 3 பேர் கைது| Dinamalar

போபால் : சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ௬௩ துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைலாஷ் சிங், சோனு சிங் மற்றும் கோரிலால்.

இவர்கள் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்று வந்தனர். இவர்கள் மீது, ௨௪க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து விசாரணை நடத்திய பஞ்சாப் போலீசார், நேற்று மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இவர்கள் மூவரையும் கைது செய்தனர். இவர்களிடருந்து, 63 நாட்டுதுப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.