பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்தால் வெள்ள நீரில் மூழ்கிய சொகுசு கார்கள்

பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ட்லி, bmw, ரேஞ்ரோவர் என ஏராளமான சொகுசு கார்கள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படும் காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

மரதஹல்லியில், 7 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை அபார்ட்மெண்ட் வீடுகள் விற்கப்படும் அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலர் டிராக்டர் டிராலி மூலம் மீட்கப்பட்டபோது செல்போனில் இந்த காணொளியை படம்பிடித்துள்ளனர்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட மற்றொரு பகுதியிலிருந்து ஒரு குடும்பத்தினர் தங்கள் ஷிட்சு இன நாய்குட்டியுடன் டிராக்டரில் வெளியேறும் காணொளியும் வைரலாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்ததை போன்று தகவல் தொழில் நுட்ப நகரில் மழை வெள்ளம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.