மூக்கு வழியே செலுத்தும் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி..! – மருத்துவத்துறையில் புதிய முயற்சி..?

மூக்கு வழியே செலுத்தும் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பிபிவி154 எனும் பெயர் கொண்ட இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு அண்மையில் இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது. 18 வயது முதல் 60 வயதுள்ள பிரிவினருக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடந்த இரண்டு கட்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், மூன்றாவது கட்டமாக மனிதர்களிடையேயான சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மூக்கு வழி செலுத்தும் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார். மூக்கு துவாரம் வழியே செலுத்தப்படும் மருந்திற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அரசு அனுமதி பெற்று சோதனை செய்தது. சோதனைக்கு பின்னர் பாரத் பயோடெக் நிறுவனம் இதை பயன்பாடிற்கு கொண்டு வர அரசு அனுமதி கோரியது.

சோதனை முடிவில் இந்த மருந்து தரமானது என்று சான்று அளிக்கப்பட்டு, 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் இதை பயன்படுத்த அறிவுருத்தப்பட்டுள்ளது. இது மருத்துவத்துறையில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.