தமிழக அரசு செம ஷாக்; உயர்நீதிமன்றம் திடீர் அதிரடி!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கும் டெண்டர் வழங்கப்பட்டது. இதில், முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரியின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆரம்பக்கட்ட விசாரணையின் அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை’ என கூறியிருந்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜராகி இருந்தார்.

இதற்கு தமிழக அரசு, ‘மத்திய அரசின் வருமான வரித்துறை வழக்கறிஞர் எப்படி இந்த வழக்கில் ஆஜராகலாம்?’ என்று ஆட்சேபம் தெரிவித்தது. மேலும் வழக்கு தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், இந்த மனுவை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும், 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க கூடாது எனவும் ஆட்சேபம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் ஆட்சேபம் குறித்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி, எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும்.

மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்த வழக்கு மீதான இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது பற்றிய விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை கையில் எடுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றமே திடீரென சேம் சைடு கோல் போட்டு உள்ளதால் தமிழக அரசு கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.