`திருப்பதி அன்னதானம்': ஆர்கானிக் காய்கறிகளையும் நன்கொடையாக வழங்கலாம்!

திருமலை திருப்பதியில் வரும் பக்தர்களுக்குத் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துக்கு உதவும் வகையில் பல நன்கொடையாளர்கள் காய்கறிகளைக் கொடுத்து, அன்னதானத்தில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

திருப்பதி திருமலை

இந்த நன்கொடையாளர்களுடனான கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில், இந்த வருடத்துக்கான நன்கொடையாளர்களின் குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமையன்று திருமலை அன்னமய்யபவனில் நடைபெற்றது.

சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து, காய்கறிகளை நன்கொடையாக வழங்கும் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி பேசுகையில், “தேவஸ்தானத்துக்கு 2004-ம் ஆண்டிலிருந்து இதுவரை 200 கோடி ரூபாய்க்குக் காய்கறிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடையானது வெற்றிகரமாக 18-வது ஆண்டை அடைந்துள்ளது. இதற்குப் பல சந்தர்ப்பத்தில் பல மாநிலங்களிலிருந்தும் காய்கறிகளை நன்கொடையாக வழங்கியவர்களுக்கு நன்றி.

அன்னதானம்

அதோடு திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்க, இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை நன்கொடையாக வழங்க நன்கொடையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.