தமிழகத்தில் இன்றமாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அம்மாநிலத்தை ஒட்டி உள்ள மாவட்டங்களிலும் அதிகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.