மாமியாரின் விரல்களைகடித்து குதறிய மருமகள்| Dinamalar

மும்பை :’டிவி’யை நிறுத்திய மாமியாரின் கைவிரல்களை மருமகள் கடித்ததால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிப்பவர் விருஷாலி குல்கர்னி, ௬௦. இவர் சமீபத்தில், தன் வீட்டில் பக்தி பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது மருமகள் விஜயா, ௩௨, டிவி பார்த்துக் கொண்டிருந்தார். டிவி சத்தம் அதிகமாக இருந்ததால், அதை நிறுத்துமாறு விருஷாலி கூறியுள்ளார். ஆனால், மருமகள் அதை காதில் வாங்கவில்லை. இதனால், மாமியார் எழுந்து சென்று டிவியை நிறுத்தியுள்ளார்.

இதில் கோபமடைந்த விஜயா, தன் மாமியாரின் கை விரல்களை பிடித்து கடித்துள்ளார். இதில், அவரது மூன்று விரல்களில் பலத்த காயமேற்பட்டது. அப்போது, இடையில் புகுந்து தடுக்க முயன்ற கணவரின் கன்னத்திலும் விஜயா பளார் என அறைந்துள்ளார். இது குறித்து விருஷாலி அளித்த புகாரின்படி, விஜயா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.