மும்பை :’டிவி’யை நிறுத்திய மாமியாரின் கைவிரல்களை மருமகள் கடித்ததால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிப்பவர் விருஷாலி குல்கர்னி, ௬௦. இவர் சமீபத்தில், தன் வீட்டில் பக்தி பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது மருமகள் விஜயா, ௩௨, டிவி பார்த்துக் கொண்டிருந்தார். டிவி சத்தம் அதிகமாக இருந்ததால், அதை நிறுத்துமாறு விருஷாலி கூறியுள்ளார். ஆனால், மருமகள் அதை காதில் வாங்கவில்லை. இதனால், மாமியார் எழுந்து சென்று டிவியை நிறுத்தியுள்ளார்.
இதில் கோபமடைந்த விஜயா, தன் மாமியாரின் கை விரல்களை பிடித்து கடித்துள்ளார். இதில், அவரது மூன்று விரல்களில் பலத்த காயமேற்பட்டது. அப்போது, இடையில் புகுந்து தடுக்க முயன்ற கணவரின் கன்னத்திலும் விஜயா பளார் என அறைந்துள்ளார். இது குறித்து விருஷாலி அளித்த புகாரின்படி, விஜயா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மும்பை :’டிவி’யை நிறுத்திய மாமியாரின் கைவிரல்களை மருமகள் கடித்ததால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிப்பவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்