ரவுடிகளுக்கு வைக்கப்போகும் ஆப்பு..! – தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவால் கலக்கம்..!

குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும், போலீசார் கண்காணிக்க வேண்டும் என, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இதை உறுதி படுத்தும் விதமாக சட்ட ஒழுங்கிற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் குற்றச்சம்பவங்கள் நடை பெற்று வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முயற்சி எடுத்து வருகிறார்.

குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும், போலீசார் கண்காணிக்க வேண்டும் என, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.

ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, கடந்த பிப்ரவரி மாதம் மாநிலம் முழுதும், போலீசார் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 3,325 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, கத்தி உட்பட, 1,110 ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அதன் பிறகும், அவ்வப்போது சோதனை நடத்தி, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்து உள்ளனர். அவர்களில், சிறைகளில் இருப்போர், ஜாமினில் வெளியே வந்துள்ளோர் பற்றிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ரவுடிகளுக்கு தஞ்சம் அளிக்கும் அரசியல்வாதிகள் குறித்தும், போலீசார் தகவல்களை திரட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் வசிக்கும் ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் குறித்த விபரங்களை சேகரித்து, போலீசார், ‘அப்டேட்’டில் இருக்க வேண்டும்.
இது போன்ற நபர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிப்பதும், போலீசாரின் அன்றாட பணிகளில் ஒன்றாக பின்பற்றப்பட வேண்டும் என, டிஜிபி சைலேந்திர பாபு வாய்மொழியாக உத்தரவிட்டு உள்ளார். இதனால், போலீசார் அலர்ட்டாக உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.