சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (15-ம் தேதி ) மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரையில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த பிறகு 16-ம் தேதி அமைச்சர்கள் அவர்களின் மாவட்டங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த 12-ம் தேதி பள்ளி மேலாண்மை குழுவில் விவாதிக்கப்பட்டது.
எவ்வளவு கிராம் (ஒரு குழந்தைக்கு)
- மூலப் பொருட்களின் அளவு 50 கிராம்
- பருப்பு 15 கிராம்
- சமைத்தபின் உணவு அளவு 150 முதல் 200 கிராம்
- சாம்பார் அளவு 60 கிராம்
- கிச்சடி அளவு 100 கிராம்
- சேகரி அளவு 60 கிராம்
உணவு வகைகள்
- திங்கள் – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
- செவ்வாய் – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.
- புதன் – வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.
- வியாழன் – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
- வெள்ளி – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.
- வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி.
எந்த நேரம்?
- 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது.
- இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
- இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தினசரி காலை 8.15 மணி முத்ல் 8.50 மணிக்குள் காலை உணவு வழங்க வேண்டும்.
- உள்ளூர் சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும்
- பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும்