IT Employees: Moonlighting செய்யும் IT ஊழியர்களே உஷார்! உங்கள் வேலை காலியாகிவிடும்!

IT நிறுவன ஊழியர்கள் கூடுதல் பணத்தேவைக்காக ஒரே நேரத்தில் இரு IT நிறுவனங்களுக்கு வேலை செய்கிறார்கள். இவ்வாறு அவர்கள் பகலில் ஒரு நிறுவனத்திலும் மீதம் உள்ள நேரத்தில் மற்ற நிறுவனங்களுக்கும் வேலை செய்கிறார்கள்.

ஆனால் இதனை பல IT நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவர்களை பொறுத்தவரை இரு நிறுவனங்களுக்கு வேலை செய்தால் ஒரு நிறுவனத்தில் செய்துவரும் திட்டங்களை பற்றி போட்டி நிறுவனங்களுக்கு தெரியும் அபாயம் உள்ளது.

இதனை அவர்கள் ஏமாற்று வேலை என்றே கூறுகிறார்கள். Infosys நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நேரடியாக இமெயில் மூலம் செய்தி அனுப்பியுள்ளது. அதில் இவ்வாறு ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களுக்கு வேலை செய்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது.

Flipkart Big Billion days sale: 20 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

மேலும் புதிதாக வேளைக்கு சேரும் ஊழியர்களிடமும் இதுபோன்ற முக்கிய குறிப்புக்கள் அவர்களின் கடிதத்திலேயே குறிக்கப்படுகிறது. இதேபோல Wipro நிறுவனம் தெரிவித்ததாவது “IT துறையில் ஊழியர்கள் பலர் இவ்வாறு Moonlighting செய்கிறர்கள். இது சுலபமாக கூறவேண்டும் என்றால் ஏமாற்றுவேலை ஆகும்.

இதற்காகவே முன்னணி IT நிறுவனங்களான Infosys, TCS மற்றும் Wipro ஆகிய நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் Variable Payout சலுகைகளை நீட்டித்தும், நிறுத்தியும் வைத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஊழியர்களின் வேலையில் ஏற்பட்ட குறைபாடு என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால் ஊழியறலை பொறுத்தவரை அவர்கள் Moonlighting செய்ய முக்கிய காரணமாக பணத்தேவை என்று கூறப்பட்டாலும் ஊழியர்கள் பலர் இவ்வாறு செய்ய முக்கிய காரணமாக வேலை செய்யும் நிறுவனத்தின் அவர்களுக்கு பிடித்த வேலை செய்யமுடியவில்லை.

SOVA Virus இந்திய வந்துவிட்டது! Android பயனர்களே Banking செய்யும்போது உஷார்!

இதனாலேயே அவர்கள் வேறு ஒரு நிறுவனத்தில் அவர்களுக்கு பிடித்த வேலையே செய்ய ஆசைப்படுகிறார்கள். இதனை அவர்கள் தீவிரமாகவும் அல்லது பொழுதுபோக்கிற்காகவும் செய்கிறார்கள்.

இவ்வாறு ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு வேலை செய்வது என்பது IT நிறுவனங்களுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும் அது ஊழியர்களின் திறனை குறைத்துவிடும் என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

ஊழியர்களை பொறுத்தவரை ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களில் வேலை செய்யும் சமயம் அவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது என்னவென்றால் இரு நிறுவனங்களுக்கு வேலை செய்தால் ஊழியர்களின் குடும்பத்துடன் அவர்கள் நேரத்தை செலவிட கூட அவர்களுக்கு நேரம் இருக்காது. பல பிரச்சனைகள் இருந்தாலும் இதனை முடிவெடுக்கவேண்டியது IT ஊழியர்களே.

Jio 5G சேவை இந்தியாவில் அடுத்த மாதம் தொடக்கம்! 5G சேவையை பெற என்னசெய்யவேண்டும்?

Tech Mahindra போன்ற IT நிறுவனங்கள் இந்த Moonlighting செய்யும் ஊழியர்களுக்கு ஏற்றவாறு அவர்களின் கொள்கைகளை மாற்றப்போவதாகவும் அறிவித்துள்ளது. இப்போதைக்கு இந்த Moonlighting என்பது IT துறையில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகவே பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.