பொதுவெளியில் தோன்றிய அதிபர்… வீட்டுக் காவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த உலகத் தலைவரையும் சந்திக்கவில்லை, அவர் சார்ந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைக் கூட அவர் பார்க்கவில்லை.

இந்த நிலையில் செப்டம்பர் 14 இல் அவர் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு விமானம் மூலம் மத்திய ஆசியாவுக்குப் புறப்பட்ட ஜி ஜின்பிங், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி ஜி ஜின்பிங் சீனா திரும்பியதும், அவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூகவலைதளங்களில் சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதி…. கலக்கும் நித்தி!

குறிப்பாக, ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், பல கிலோ மீட்டர் நீளமுள்ள ராணுவ வாகன அணிவகுப்பு தலைநகர் பெய்ஜிங்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அமெரிக்க வாழ் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிபர் வீட்டு்க் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல் உண்மைதானா என்று அந்நாட்டு மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்து வந்தது. இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சி ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பங்கேற்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பரவி வந்த வதந்திக்கு அதிபர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.