`பொன்னியின் செல்வன்' டூடுல் கதாபாத்திரங்களை வெளியிட்ட அமுல்!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்போடு வெளியான `பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்திற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, அமுல் நிறுவனம் அனிமேட்டடு டூடுல் (Doodle) ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் சோழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக ரிலீசாகியிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கல்கி எழுதிய இந்த வரலாற்றுக் கதைக்கென ஏற்கெனவே பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களுக்கு சற்று கூடுதலாகவே இருந்தது. இந்த வரலாற்றை, கதைக்குள் சுருக்க முடியாது எனக் கூறியவர்கள் கூட, பொன்னியின் செல்வன் திரையரங்கில் வெளியானதற்குப் பின் நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு நீட்சியாக அமுல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று, விக்ரம், ஐஸ்வர்யா, த்ரிஷா மற்றும் கார்த்தியின் பொன்னியின் செல்வன் அனிமேட்டடு புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

அதில் இந்த கதாபாத்திரங்கள், வெண்ணெய் பூசப்பட்ட ரொட்டியை ரசித்து ருசித்துச் சாப்பிடுவது போலக் காட்டப்படுகிறது. மணிரத்னத்தின் காவிய படமான பொன்னியின் செல்வன் வெளிவந்தது என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.