அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் சடலமாக மீட்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கலிபோர்னியா: அமெரிக்கா கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட, 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி போலீசார் சடலமாக மீட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப் சிங்(39) என்பவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். நெடுஞ்சாலையில், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே, அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர்.
அவர்களிடம் ஆயுதம் உள்ளதாகவும், ஆபத்தானவர்கள் எனவும் கூறிய போலீசார், விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மீட்பு:


கடத்தலுக்கான காரணம் மற்றும் நோக்கம் ஆகியவை பற்றி கூறாத போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டால், பொது மக்கள் அவர்களை அணுகாமல் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

latest tamil news

இந்நிலையில், கடத்தி செல்லப்பட்ட குடும்பத்தினர், போலீசாரை தொடர்புகொண்டு, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இன்று(அக்.,06) 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி போலீசார் சடலமாக மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.