திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதாலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அந்த வகையில், புரட்டாசி மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்ச கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில் நாராயண தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரிசைகளும் நிரம்பியதால் தற்பொழுது பாபவிநாசம் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுமார் 5கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்து இருக்கின்றனர்.

இதன் காரணமாக, கட்டணமில்லா தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன்னில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு 6 மணி நேரமும், கல்யாண உற்சவம், முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் அடிப்படையில் வருகின்ற பக்தர்களுக்கு 3 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்களில் வருகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால் உள்ளதால் காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளித்து சாமி தரிசனம் செய்து செல்ல வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்களுக்காக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் உள்ளிட்ட பிரசாதங்கள் வரிசையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.