புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்வு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. இதுவரை 34 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு  அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் செப்டம்பர் மாதம்  38 சதவீத மாக அதிகரித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி மாநில அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த அகவிலைப்படி உயர் வானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.