நாளை அரச சேவைகள் வழமை போன்று இடம்பெறும் – வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு


நாளை தினம் (10) அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை தினம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளை அரச சேவைகள் வழமை போன்று இடம்பெறும் - வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு | Government Services Will Continue As Usual

வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்

இதேவேளை, நாளைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு மாத்திரம் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.