ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தங்பவா என்ற பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது சுட்டனர்.
உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் குறித்த விபரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement