சொகுசு பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சொகுசு பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது இராமேஸ்வரத்திலிருந்து பயணிகளுடன் மண்டபம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று இன்று காலை பாம்பன் பாலத்தில், சொகுசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர விபத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.