தமிழில் வெளியாகும் பிளாக் பேந்தர் 2

மார்வெல் ஸ்டூடியோவின் சூப்பர் ஹீரோக்கள் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் பேந்தர் என்ற சூப்பர் ஹீரோ படம் வெளியானது. முதன் முதலா கருப்பினத்தை சேர்ந்தவர் சூப்பர் ஹீரோவாக நடித்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபார்எவர்' என்ற பெயரில் ரையான் கூக்லர் இயக்கத்தில் தயாராகி உள்ளது.

முதல் பாகத்தில் சூப்பர் ஹீரோ தங்கள் இனத்தவர் வாழ வகாண்டா என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இந்த பாகத்தில் வகாண்டா சாம்ராஜ்யத்தை வல்லரசுகள் இணைந்து வீழ்த்த பார்க்கிறது. அதனை சூப்பர் ஹீரோயின் எப்படி முறியடிக்கிறார் என்கிற கதை.

இந்த பாகத்தில் சூப்பர் ஹீரோ இல்லை, சூப்பர் ஹீரோயின். வகாண்டா நாட்டின் ராணியாக ஆஞ்சலா பாஷ்ட்டும், சூப்பர் ஹீரோயினாக லடிஷா ரைட்டும் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற நவம்பர் மாதம் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.