நிலக்கரிக்கு பதிலாக டீசலில் இயங்கும் நீராவி எஞ்ஜின்: மலை ரயில் எஞ்ஜின் சோதனை வெற்றி

முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு, நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நீராவி எஞ்ஜின் மூலமும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் எஞ்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி எஞ்ஜினை தயாரிக்கும் பணி தொடங்கியது. முலை ரயில் எஞ்ஜினின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைக் கொண்டு ரூ.9.30 கோடி மதிப்பில் புதிய மலை ரயில் எஞ்சின் தயாரிக்கப்பட்டது.
image
இதையடுத்து மேட்டுப்பாளையத்திற்கு மலை ரயில் என்ஜின் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள லோகோ செட் பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரயில் எஞ்ஜின் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் முதல் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் பாதையில் உள்ள அடர்லி ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை புதிய மலை ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. புதிதாக தயாரிக்கப்பட்ட டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் எஞ்ஜினில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்ட மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
image
மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டம் செல்லும் போது எஞ்ஜினில் ஏற்படும் மாற்றங்களை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.