புதுடில்லி : அசாமில் அதிவேக ரயில் மோதி, பெண் யானை மற்றும் அதன் குட்டி உயிரிழந்தன. மற்றொரு யானை பலத்த காயத்துடன் உயிர் தப்பியது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் ஜோர்ஹட் மாவட்டத்தில் உள்ள திதாபர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில் பெண் யானை மற்றும் அதன் குட்டி, மற்றொரு யானை ஆகியவை பலத்த காயம் அடைந்தன.
இரவு முழுதும் துடித்துக் கொண்டிருந்த பெண் யானையும் அதன் குட்டியும் நேற்று காலை உயிரிழந்தன. பலத்த காயம் அடைந்த மற்றொரு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement