கேள்விகளுக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை பார்த்து ‘ கெட் அவுட்’ எனக் கூறிய ஹெச்.ராஜா

திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், செய்தியாளர்களைப் பார்த்து ’கெட் அவுட்’ என்று கூறி கோபமாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் பாஜக சார்பில் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தவாறு இருந்தார். அப்போது செய்தியாளர்கள் தொடர்ந்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் செய்தியாளர்கள் அனைவரும் இந்து விரோதமாக நடந்து கொள்கிறீர்கள் எனவும், செய்தியாளர்களைப் பார்த்து இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுகிறீர்கள் என்றும் தெரிவித்து கெட் அவுட் என்று கூறி விட்டு செய்தியாளர்கள் சந்திப்பைப் புறக்கணித்து கோபத்துடன் வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை பாஜகவினர் சூழ்ந்து கொண்டு செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.