சில தகவல்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது- அமைச்சர் பிடிஆர் வருத்தம்!

மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்ற முடிவடைந்து அதில் மாவட்ட செயலாளராக கோ.தளபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே தேர்தலின் போது மாவட்ட செயலாளரான கோ. தளபதி அணியினரும், மற்றொரு அணியாக அதலை செந்தில் அணியினராக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அணியினரும் இரண்டு தரப்பினராக மோதிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில்

திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு, மதுரை மடீட்சியா அரங்கில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முழுவதுமாகவே நிதி அமைச்சரின் ஆதரவாளர்கள் மட்டும் வந்திருந்ததாக கூறி, கட்சி சார்பில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் கோ. தளபதி புறக்கணித்தார்.

ராஜராஜ சோழன் இந்து கிடையாதா? இயக்குனரை விளாசிய கிருஷ்ணசாமி !

இந்த நிலையில் மேடையில் பேசிய நிதி அமைச்சர் தியாகராஜன்: திமுக தலைவராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதற்காக இந்த விருந்தினை ஏற்பாடு செய்திருந்தேன். நம் கலாச்சாரத்தில் இருக்கும் விருந்தோம்பல் அடிப்படையில் இந்த ஏற்பாட்டினை நான் செய்து இருந்தேன். ஆனால், சில நாட்களாக வரக்கூடிய தகவல்கள் எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. தலைவரின் பேச்சை மீறி சிலர் செய்நன்றி மறந்த நிலையில் உள்ளனர்.

தலைவருக்காக நடத்தப்படக்கூடிய இந்த நிகழ்ச்சியை, மகிழ்ச்சிகரமான விருந்தை புறக்கணித்து யாரும் வரக்கூடாது என மிரட்டல் விடுத்தது வேதனை அளிக்கிறது. அவர்கள் சிறிய மனிதராக நடந்து கொள்ளக்கூடாது. சுயமரியாதைக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனவும், மதுரையில் என்னால் பயனடைந்து செய்நன்றி மறந்தவர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு ஒரு நாள் வீழ்ச்சி வரும். நான் படித்தவன், உண்மையை மட்டும் தான் தலைவரிடம் பேசினேன். என் அனுபத்திலும், அறிவிலும், தன்மையை பயன்படுத்தி நான் தலைவரிடத்தில் பேசினேன். எங்கள் குடும்பத்தினர் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்து இருக்கின்றார். கல்வியின் அடிப்படையில், ஞானத்தின் அடிப்படையில் எனக்கு எது உண்மை என்று தெரிகிறதோ அதை நான் பபின்பற்றுவேன்.

தந்தை பெரியார் சொன்னது போல, ஆராய்ந்து செயல்பட வேண்டும், யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும் தெளிவாக தெரிந்து செயல்படவேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் எங்கள் கொள்கை ஒன்றாகத்தான் இருக்கும்.

நான் பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கிறேன். ஆனால் சிலருக்கு பொருளாதாரத்தை விட பேராசை படுகின்றனர். நான் யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை, என்ன நடக்குமோ அது விரைவில் நடக்கும். திறமையற்றவர்களை திறமையானவர்களாக காட்ட முடியாது. ஆனால் சுயமரியாதை உள்ளவர்களை மாற்ற முடியாது. சிலர் திமுக கட்சி பொறுப்பை தருவதாக கூறி எனது ஆதரவாளர்களை போனில் அழைத்துள்ளனர். ஆனால் என் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.