பெற்றோரின் அலட்சியம்.. எமனாக வந்த விசில்… பறிபோன பிஞ்சு உயிர்.! 

சென்னையில் வீட்டில் விளையாடும் போது விசிலை விழுங்கிய குழந்தை உயிரிழந்துள்ளது. 

சென்னை பூந்தமல்லி லட்சுமிபுரம் ரோடு பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (38) , மற்றும் அவரது மனைவி வனஜா வசித்து வருகின்றனர். அவர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். 

இவர்களுக்கு தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். வழக்கம் போல் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தது. 

அக்குழந்தை விளையாட்டின் போது அங்கிருந்து விசிலை எடுத்து விழுங்கி விட்டது. அதனால் மூச்சு திணறல் ஏற்படவே குழந்தை கயல்விழி சிறிது நேரத்திலே மயங்கியது. இதனை கண்டு பெற்றோர் அலறி அடித்து கொண்டு குழந்தை தூக்கி எதாவது விழுங்கி இருக்குமோ என்ற எண்ணத்தில் முதுகில் தட்டியபோது வாயிலிருந்து விசில் கீழே விழுந்தது. 

அப்போது குழந்தை விசிலை விழுங்கியது தெரியவந்தது. இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன குழந்தை கயல்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். விளையாடும் போது விசிலை விழுங்கிய 1 வயது குழந்தை இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.