ரயில்ல தள்ளி விட்டு தண்டிங்க – விஜய் ஆண்டனி கோபம்

சென்னையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பெண்ணின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொலைகாரன் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு : ‛‛சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல் தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக கனம் நீதிபதியை கெஞ்சி கேட்கிறேன்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.