பாஜக எம்எல்ஏவுக்கு 2 மாதம் சிறை: பெங்களூரு கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல்களை அளித்ததாக, பெங்களூரு பாஜக எம்எல்ஏவுக்கு 2 மாதம் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு சிக்பேட் சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் உதய் கருடாச்சார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது அவர், தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்ததாகவும், தன் மீதான வழக்குகளை மூடி மறைத்ததாகவும் கூறி பெங்களூரு 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இதில், தகவல்களை மூடி மறைத்த வழக்கில் உதய் கருடாச்சாருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தவிட்டார். அத்துடன், கோர்ட் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.