இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,401 ஆக சரிவு

புதுடில்லி:
ந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,28,828 ஆனது.

கடந்த 24 மணி நேரத்தில், 2,373 பேர் குணமடைந்து உள்ளதை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,73,308 ஆனது. தற்போது 26,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,895 ஆக உயர்ந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.