புதுடில்லி, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் பதவிக் காலம், வரும் நவ., 8ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யும்படி, தற்போதைய தலைமை நீதிபதிலலித்துக்கு மத்திய அரசு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சந்திரசூட்டை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க, அவர் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமிக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட், நவ., 9ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement