காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே..!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்ட நிலையில், 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். இதற்காக, நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில காங்கிரஸ் கமிட்டியின் 9 ஆயிரத்து 915 பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர்.

அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். ஓட்டுப்பதிவு முடிவடைந்ததையடுத்து டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு ஓட்டு பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு, ஓட்டுப் பெட்டிகள் பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.