மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்பு குழு அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

கழுகுகளின் எண்ணிக்கை குறைந்துவருதை தடுக்க, மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்புக் குழு அமைக்க, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வனத்துறையின் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கழுகுகள் பாதுகாப்பு செயல் திட்ட ஆண்டறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பலவற்றை, இந்த குழுவின் பணிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் வரன்முறை செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.