“முடிந்தால் பிரதமருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்யுங்கள்!" – மணீஷ் சிசோடியா காட்டம்

மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாமீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகளால் அவர் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க-வில் சேருமாறு சி.பி.ஐ அழுத்தம் கொடுத்ததாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியிருந்தார்.

பாஜக

இந்த நிலையில் மேற்கு தில்லியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா,”சிசோடியா நேர்மையான தலைவராக இருந்தால் அவர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். சிபிஐ அதிகாரி யாராவது சிசோடியாவை பாஜக-வில் சேரக் கூறியிருந்தால், அவர் அந்த அதிகாரியின் பெயரைச் சொல்ல வேண்டும். அவரால் முடியாவிட்டால், சி.பி.ஐ அதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக பதவி விலக வேண்டும். இதற்கு அவர் தயாரா?” என சவால் விடுத்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்த மணீஷ் சிசோடியா, “நாட்டில் மிகப் பெரிய பொய்யர் என்று அழைக்கப்படும் அரசியல்வாதி என்றால் அது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பா.ஜ.க-வினர் முடிந்தால் பிரதமரிடம் பொய் கண்டறியும் சோதனை மூலம் போதைப்பொருள் சோதனை, சிபிஐ மற்றும் அமலாக்க அமைப்பு நடுநிலையான அமைப்புகளா என்று சொல்லச் சொல்வார்களா?” எனத் தெரிவித்திருக்கிறார்.

மோடி

சிபிஐ தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து, “எஃப்.ஐ.ஆர்-ல் சிசோடிய மீதான குற்றச்சாட்டுகளின்படி சட்டபூர்வமான முறையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சட்டப்படி தொடரும்” என்று தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.