திருப்பதி : ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்கள், திருப்பதி அருகே சுங்கச் சாவடி ஊழியர்களை தாக்கி, வாகனங்களையும் மறித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் படிக்கின்றனர். சமீபத்தில் நடந்த தேர்வுக்காக சென்றிருந்த மாணவர்கள், நேற்று முன் தினம் சொந்த ஊருக்கு காரில் வந்தனர். அதில் ஒரு காரின் ‘பாஸ் டேக்’ செயல்படவில்லை.
இதையடுத்து, சுங்க கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் கேட்டனர். ஆனால், மாணவர்கள் தர மறுத்து தகராறு செய்து, சுங்கச் சாவடி ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் பிரச்னையை பேசித் தீர்க்கும்படி அறிவுறுத்தினர்.
ஆனால், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் அனுமதித்த சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆந்திர பதிவெண் கொண்ட வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதனால், திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கடுமையாக எச்சரித்த பின், அந்த மாணவர்கள் தங்கள் வாகனங்களில் கிளம்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆந்திர போலீசார் உறுதியளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement