மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்!!

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 355 என்ற அளவில் பதிவாகி ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியுள்ளது.

காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 355 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியது. டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 355, மதுரா சாலை பகுதியில் 340, நொய்டாவில் 392 என்ற நிலையில் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.