விவசாயி அடித்துக் கொலை – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்மீது பாய்ந்த குண்டாஸ்!

தேனியில் கட்டையால் அடித்து விவசாயியை கொலைசெய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தேனி மாவட்டம் போடி அருகே தேவாரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி யோக ஈஸ்வரன் (35). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (50) என்பவருக்கும் நில பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் மணிகண்டன், இவரது மனைவி சுந்தர லட்சுமி (47), மகன் ராமகிருஷ்ணன் (25) ஆகியோர் சேர்ந்து ஈஸ்வரனை கட்டையால் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து தேவாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 3 பேரையும் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

image

இந்நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன் பேரில் இந்த உத்தரவை தேவாரம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.