உயிரற்ற விந்தணுக்கள் கொண்டவருக்கு குழந்தை பிறக்குமா?|காமத்துக்கு மரியாதை – S 3 E 15

விந்தணுக்கள் பூஜ்யம். இந்தப் பிரச்னையை பலரும் கேள்விப்பட்டிருப்போம். நம்முடைய வாசகர் ஒருவர், [email protected]க்கு, `விந்தணுப் பரிசோதனை யில் எனக்கு பூஜ்யம் என்று ரிசல்ட் வந்திருக்கு. என் பிரச்னைக்குத் தீர்விருக்கிறதா, எனக்குக் குழந்தை பிறக்குமா’ என்று மெயில் அனுப்பியிருந்தார். அவருடைய பிரச்னைக்கு காரணமென்ன, தீர்வென்ன என்பன குறித்து, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் கேட்டோம். 

“விந்தணுக்கள் பூஜ்யம் என்றால், பெரும்பாலும் இதற்கு பிறவிக்குறைபாடுதான் காரணமாக இருக்கும். தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, அவருக்கு வயிற்றில் அடிபட்டதன் காரணமாகவும் சிசுவுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். 

அல்லது, ஆண் குழந்தையின் 13 அல்லது 14 வயதில் புட்டாளம்மை வந்திருந்தால், அந்த வைரஸ் கிருமி விதைப்பையைத் தாக்கி இருந்தாலும் விந்தணுக்கள் பூஜ்யம் என்ற நிலை வரலாம்.  

sex education

பாலியல் தொழிலாளர்களிடம் உறவு வைத்துக்கொள்கிற ஆண்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இதை நான் பொதுவாகச் சொல்கிறேன். இந்த வாசகரைக் குறிப்பிட்டு சொல்லவில்லை. பாலியல் தொழிலாளருக்கு கொனோரியா நோய் இருந்தால், அவருடன் உறவு கொள்பவர்களுக்கு நோய் தொற்றிவிடும். மருத்துவரை சந்திக்க கூச்சப்பட்டுக் கொண்டு தாங்களாகவே கடையில் வாங்கி மருந்து சாப்பிட்டுவிடுவார்கள். அது அப்போதைக்கு சரியானதுபோல இருந்திருக்கலாம். ஆனால், அது முழுமையான சிகிச்சையில்லை என்பதால், கொனோரியா கிருமி விதைப்பையை பாதிக்கலாம். 

சிறு வயதில் விளையாடும்போது விதைப்பையில் பலமாக அடிபட்டதன் காரணமாகவும் இந்தப் பிரச்னை வரலாம்.  எக்ஸ்ரே, அட்டாமிக் ரியாக்டர்ஸ் போன்ற துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் விதைப்பை சேதமாகலாம். இதை ரேடியேஷன் இன்ஜூரி என்போம். 

சூடான இடத்தில் தொடர்ந்து இருந்து வந்தாலும் விதைப்பை பாதிக்கப்படலாம்.  இந்த வாசகருக்கு உயிரணுக்கள் உற்பத்தி முழுமையாக இல்லையா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பிறகு காரணத்தைக் கண்டறிய வேண்டும்” என்றவர், தீர்வுகள் குறித்தும் பேசினார். 

Dr. Narayana Reddy

”விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், மருத்துவ சிகிச்சையால் அதிகரிக்க முடியும். பூஜ்யம் என்றால், சற்றுக் கடினம்தான். ஆனால்,  இப்படிப்பட்டவர் களுக்குக் குழந்தை பிறப்பதற்கு ஒரு வழியிருக்கிறது. விதைப்பையிலிருந்து ஊசி மூலம் சிறிதளவு தசையை எடுத்து, அதில் ஒன்றிரண்டு உயிரணுக்கள் உயிரோடு இருந்தாலும், அதன் மூலம் அவருடைய மனைவியைக் கருத்தரிக்க வைக்க முயற்சி செய்யலாம். உடனடியாக, ஆண்ட்ராலஜிஸ்ட் (Andrologist) அல்லது குழந்தையின்மை சிகிச்சை நிபுணரிடம் (Infertility expert) ஆலோசனை பெறுங்கள்’ என்றார் பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.