கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம்… உளறிக் கொட்டிய அர்ஜூன் சம்பத்!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவித்தில் கடந்த 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, திருவாசகம் பாடல்கள் பாடி குரு பூஜை கொண்டாடப்பட்டது.

இந்து மக்கள் கட்சி சார்பாக தமிழ் முறைப்படி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அகில பாரத சந்நியாசிகள் சங்க தலைவர் ராமானந்த சுவாமி முன்னிலையில் சந்தனம், பால், குங்குமம், திரவியம், உள்ளிட்ட 32 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘குருபூஜை விழா, சதய விழா போன்றவற்றில் திராவிட இயக்கங்களுக்கு நம்பிக்கை இல்லை. தஞ்சையில் நடைபெற்ற ராஜராஜ சோழனின் சதய விழாவில் அமைச்சர்கள் பங்கேற்காதது அவர்களின் மூடநம்பிக்கையை காட்டுகிறது.

கோயம்புத்தூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் உடைய தாக்குதல். தென் இந்தியாவில் முதன்முறையாக ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடைபெற்று உள்ளது என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.