Breaking News: ஏரியில் விழுந்த விமானம்; தண்ணீரில் மூழ்கிய பயணிகள்!

தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து கொண்டு இருந்தனர்.

இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து ( Plane Crash ) விபத்துக்கு உள்ளானது. இன்று அதிகாலை நடந்து விபத்துக்கு அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தான்சானியா மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன் பிறகு, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

ஜெ.தீபாவுக்கு குழந்தை பிறந்தது; ஜெயலலிதாவுக்கு அடுத்த வாரிசு!

இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இந்த விமானம் 100 மீட்டர் உயரத்தில் நடுவானில் சென்றபோது, அப்பகுதியில் மிகவும் மோசமான வானிலை நிலவியுள்ளது.

மேலும், மழை பெய்து கொண்டு இருந்ததால் விமானம் தண்ணீரில் மூழ்கியது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.