
காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் பூஜா ஹெக்டே
பீஸ்ட், ஆச்சார்யா படங்களைத் தொடர்ந்து தற்போது ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. ஹிந்தியில் சல்மான்கான் உடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பூஜா ஹெக்டே காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் தனது காலில் அணிந்திருந்த ஸ்பிலின்டை நீக்கிவிட்டு சோபாவில் அமர்ந்தபடி ஒரு வாளியில் வைக்கப்பட்ட தண்ணீரில் தனது காலை வைத்தபடி தான் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் பூஜாஹெக்டே. அதோடு இந்த விபத்துக்கு பிறகு தினமும் என்னுடைய காலை இப்படித்தான் விடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பூஜா ஹெக்டேவுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சல்மான்கான் உடன் நடித்து வரும் கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் மற்றும் தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை பூஜா ஹெக்டே அல்லாத மற்ற நடிகர் நடிகைகளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.