சசிகலாவின் வீட்டில் பரபரப்பு.. விவேக்கின் மனைவி தற்கொலை முயற்சி.?

அண்ணன் மகன் விவேக்கின் மனைவி, அதிகளவில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர். பிரீஸ் கார்டனை சேர்ந்தவர் விவேக். சசிகலாவின் அண்ணன் மகனான இவர், ஜாஸ் சினிமா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற கீர்த்தனா (28) என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வைவேக் வீட்டிற்கு தாமதமாக வந்ததால் விவேக்கிற்கும் கீர்த்தனாவுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. விவேக் சமாதானப்படுத்தியும் கீர்த்தனா ஆறுதல் அடையவில்லை என தெரிகிறது.

இந்த சூழலில், தீடிரென கீர்த்தனா வீட்டில் இருந்த தேவையில்லாத மாத்திரைகளை அதிகளவில் விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கியதை கண்ட விவேக் அதிர்ச்சியடைந்து உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனையில் கீர்த்தனாவை சேர்த்துள்ளார். அங்கு கீர்த்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, அவரை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீர்த்தனா அதிகளவில் மாத்திரைகள் விழுங்கி சிகிச்சை பெறும் தகவலை, மருத்துவமனை நிர்வாகம் பட்டினப்பாக்கம் போலீசில் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம், கீர்த்தனா தற்கொலை முயற்சி மேற்கொள்ளவில்லை என்றும் அலர்ஜி மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டதில் கீர்த்தனாவுக்கு பிரச்னை ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக , விவேக் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் சசிகலா குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.