ஜோர்டன் நாட்டில் 2022ம் ஆண்டுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் பெண்களுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் 75 கிலோ எடைபிரிவில், கொரிய குடியரசின் சியோங் சுயோனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்து இருந்தார்.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சோகிபாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை உறுதி செய்தார். அதே போல் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், இந்தியாவின் பர்வீன் 63 கிலோ எடை பிரிவவில், ஜப்பானின் கிட்டோ மாய்யை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல் இந்தியாவின் சாவீட்டி 81 கிலோ பிரிவு மற்றும் அல்பியா பதான் 81+ கிலோ எடைபிரிவிலும் வெற்றி`பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு 12 இந்திய வீரர், வீராங்கனைகள் முன்னேறி இருந்ததால், இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் உறுதியாகி இருந்த நிலையில், தற்போது ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் 4 தங்கம் உட்பட இந்தியா 7 பதக்கங்களை வென்றுள்ளது.
அதேபோல் 25 வயதான லவ்லினாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு முன் 69 கிலோ எடைபிரிவில் கலந்து கொண்டு லவ்லினா, இந்த முறை முதன்முறையாக 75 கிலோ எடைபிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அவர் முன்கூட்டியே வெளியேறினார். இது லோவ்லினாவின் மூன்றாவது ஆசிய சாம்பியன்ஷிப் பதக்கம் ஆகும். இதற்கு முன்னர் 2017 மற்று 2021ம் ஆண்டில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடதக்கது.