சூரிய மின்சக்தி உற்பத்தி : இந்தியாவின் எரிபொருள் செலவில் 34 ஆயிரம் கோடி ரூபா சேமிப்பு

சூரிய மின்சக்தி உற்பத்தியினால் இந்தியாவின் எரிபொருள் செலவில் 34 ஆயிரம் கோடி ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, எரிசக்தி அமைப்பான ‘எம்பர்’ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகமாக உள்ள முதல் 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன.

இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் ஆகியவையே அந்த நாடுகள். இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய 7 ஆசிய நாடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக, கடந்த ஜனவரி மாதம் ஜூன் மாதம் வரை எரிபொருள் செலவில் மொத்தம் 34 பில்லியன் டொலர் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் செலவான மொத்த எரிபொருள் செலவில் 9 சதவீதம் ஆகும். இவற்றில், சீனா அதிகமான தொகையை சேமித்துள்ளது. 2 ஆயிரத்து 100 கோடி டொலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது. அந்நாட்டின் மின்சாரத் தேவையில் 5 சதவீதம், சூரிய மின்சக்தியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, ஜப்பான் 560 கோடி டொலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது. 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. மேற்கண்ட 6 மாத காலத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் இந்தியா, எரிபொருள் செலவில் 4.2 பில்லியன் டொலரை சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாவை சேமித்துள்ளது.

அதாவது, 1 கோடியே 94 இலட்சம் டொன் நிலக்கரியின் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நிலக்கரியை பயன்படுத்தி இருந்தால் நெருக்கடி அதிகரித்து இருக்கும். வியட்நாம், 170 கோடி டொலர் எரிபொருள் செலவையும், தென்கொரியா 150 கோடி டாலர் செலவையும், தாய்லாந்து 21 கோடி டாலர் செலவையும், பிலிப்பைன்ஸ் 7 கோடியே 80 இலட்சம் டொலர் செலவையும் சேமித்துள்ளன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.