இலங்கைக்கான கானா குடியரசு உயர்ஸ்தானிகர் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான கானா குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. குவாகு அசோமா-செரெமே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கானா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 நவம்பர் 11ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு.
2022 நவம்பர் 11

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.