திருட்டு வழக்கில் அல்லல்படும் அமைச்சர் பொன்முடி.. அருமை பெருமைக்கு வந்த ஆபத்து

செம்மண் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் மீது பதியப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளதால் திருட்டு பழியில் அமைச்சர் சிக்கிக்கொண்டுள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். பெண்கள் பயணிக்கும் இலவச பயண திட்டத்தை ‘ஓசி’ என்றும், விழுப்புரத்தில் சொந்த தொகுதி மக்களை பார்த்து ஆபாச வார்த்தையில் திட்டியும் கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து அரசுக்கு 28 ரூபாய் கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தன்னை திருட்டு வழக்கில் இருந்து விலக்கக்கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை, சாட்சிகள் கொடுத்த வாக்குமூலல் ஆகியவை வழக்கை தடையின்றி நடத்த போதுமான ஆதாரமாக உள்ளது என கருதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் அமைச்சர் பொன்முடிக்கு, இந்த கொள்ளை வழக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.