இது நடக்காமல் தமிழகத்தை விட்டு ஆளுநர் போக மாட்டார் – எச். ராஜா சவால்

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநர் தமிழகத்தில் தான் இருப்பார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல், ஆளுநர் தமிழகத்தை விட்டு போவதாக இல்லை என்றார்.

மேலும், மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் மழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை நீர் பாதிப்பிக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்ற அறிவிப்பு, யானை பசிக்கு சோலை பொறி போன்றது என்றும், இன்னும் ஒரு மழை பெய்தால் சென்னை மிதக்கும் என்றார்.

மேலும், காவிரியில் தடுப்பணை கட்டாததால் இன்னும் ஒரு மாத காலத்தில் அப்பகுதி, வறண்டு போய்விடும் என்றும், மழை நீர் பாதிப்பை தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. இதனால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என எச். ராஜா குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு வேதனை அளிப்பதாகவும், மருத்துவர்களின் பொறுப்பற்ற செயல் முற்றுப்பெற வேண்டும் என்றார். விடுதலைப்புலிகளின் பின்னணியில், மீண்டும் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், ஆயுத கடத்தலுக்கு முன்னர் கஞ்சா கடத்தல் நடைபெறும் என்றவர், தமிழ்நாடு கஞ்சா நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எச். ராஜா குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.