கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு இதனை தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் கோவில் சொத்துக்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.