நாளை முதல் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியீடு

சென்னை: நாளை முதல் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
தேனி மாவட்டம்,  சண்முகாநதி நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் முதல் தொகுதி மற்றும் இரண்டாம் தொகுதியில்  உள்ள புன்செய் நிலங்கள் பயன்படும் வகையில் வினாடிக்கு 14.47 கனஅடி வீதம் 17.11.2022 முதல் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன்மூலம் தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள  1640 ஏக்கர்  புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.