மத்திய அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்தக்கூடும். இந்த உயர்வு ஜனவரி மாதத்தில் நிகழ வாய்ப்புள்ளது.
சமீபத்தில், ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்பு AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. இதில் சாதகமான அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
இதன்படி, ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் வழங்கப்படுகிறது. இது 42 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.
அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 720 ஆகவும், அதிகபட்ச சம்பளம் மாதம் ரூ. 2,276 ஆகவும் அதிகரிக்கக்கூடும்.